முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
மார்க்சிஸ்ட்டுகளின் படுதோல்விக்குக் காரணம் என்ன? மார்க்சிஸ்ட்டுகளின் படுதோல்விக்குக் காரணம் என்ன? சேது ராமலிங்கம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி அதிர்ச்சியூட்டும் வகையில் தோல்வியடைந்துள்ளது. நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி மூன்று இடங்களிலும் சிபிஐ இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி 40 இடங்களில் டொபாசிட் இழந்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கட்சி சுய பரிசீலனை செய்யும் எனத் தெரிவித்துள்ளார். அவர்கள் உண்மையாகப் பரிசீலிப்பார்களோ, இல்லையோ என்பது நமக்கு தெரியாது. ஆனால், அந்தக் கட்சியின் படுதோல்விக்கான காரணங்களை நாம் ஆராய்வோம். சுருங்கிவரும் கட்சி இந்தியாவிலேயே ஒப்பீட்டளவில் பெரிய இடதுசாரிக் கட்சியாகவும் ஓரளவுக்கு வசதிகளை, குறிப்பாகக் கட்டமைப்பு வசதிகளையும் அறிவாளிகளையும் கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. சிபிஐயிலிருந்த அரசியல் தத்துவார்த்த நிலைப்பாடுகளில் வேறுபட்டு 1964இல் பிரிந்த சிபிஎம் இதுவரை இப்படிப்பட்ட படுதோல்வியைச் சந்தித்ததில்லை. 1977லிருந்து 2011 வரை ஏறத்தாழ 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆட்...
மனநலமும் முதலாளியமும்! 90களுக்கு முந்தைய உலகம் போன்று இப்போது இல்லை. இன்றைய உலகம் மிகவும் போட்டி மிகுந்ததாகவும், கடுமையான நெருக்கடிகளைக் கொண்டதாகவும் மாறியுள்ளது. அன்றைய உலகத்தில் இருப்பதைக் கொண்டு நிறைவடைபவர்களாக நமது தந்தையரும் முன்னோரும் வாழ்ந்தனர். அடைய முடியாத இலக்குகள் அவர்களுக்கு ஏதுமில்லை. பேராசைகளும் இல்லை. அதனால் ஒப்பீட்டளவில் நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையில் அமைதி நிலவியது. ஆடம்பர வாழ்க்கை உலகமயமாக்கல் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பின்னர் அனைவரும் பணம் ஈட்டுவதற்கான கடுமையான போட்டியாளர்களாகவும் மாறினர். புதிய நுகர்வுப் பொருட்களை வாங்கிக் குவிக்கும் ஆசைகள் ஆக்கிரமித்தன. அடைய முடியாத இலக்குகளை வைத்துக்கொண்டு பொருள் தேடும் அவசர வாழ்க்கையைக் கைக்கொண்டார்கள். எதிர்காலம் குறித்த கனவுகள், மாபெரும் எதிர்ப்பார்ப்புகள், அதே சமயத்தில் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவே போராட வேண்டியுள்ள வாழ்க்கை ஆகியவற்றில் ஏற்படும் முரண்பாடுகள் ஏராளமான மனச்சிக்கல்களையும் உளவியல் வதைகளையும் உருவாக்கியுள்ளன. சாதாரண பதற்றத்தில் தொடங்கி பெரிய மன நோய்களான மனச்சிதைவு (schizophrenia), ஆளுமைச் சிதைவு நோய்கள்...
மனநல மருத்துவம் தனியார்மயமாகிறதா? தேர்தல் நடந்துவரும் வேளையில் அந்தப் பரபரப்பைப் பயன்படுத்திக்கொண்டு சத்தமில்லாமல் மனநல மருத்துவத்தைத் தனியாரிடம் ஒப்படைப்பதற்கான முன் தயாரிப்பாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தேர்தல் முடியும் வரை வெளியிட முடியாது என மறுத்துள்ளது தமிழக அரசு. அதையும் மீறிக் கசிந்துள்ள செய்திகளில், ஹான்ஸ் பவுண்டேஷன், பேனியன் என்ற தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து தமிழக அரசுடன் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளனர் என்பது வெளியாகியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி அரசு மனநல மருத்துவமனையில் நீண்டகாலமாக தங்கி சிகிச்சை பெறும் மனநோயாளிகளை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். ஹாஃப்வே ஹோம்ஸ் மனநல மருத்துவமனைகளில் பல ஆண்டுகளாகத் தங்கி குணமாகியிருந்தாலும், அல்லது ஆகாவிட்டாலும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியாமல் கைவிடப்பட்ட நோயாளிகள் இருப்பார்கள். இவர்களைச் சமூகத்துடன் இணைக்கும் பாலமாக வீட்டைப் போன்ற சூழலுடன் உள்ள ஹாஃப் வே இல்லங்களை (halfway homes) உருவாக்கி அவற்றில் தங்க வைத்து சிகிச்சை அளிப்பதுண்டு. வெளி நா...