மார்க்சிஸ்ட்டுகளின் படுதோல்விக்குக் காரணம் என்ன? மார்க்சிஸ்ட்டுகளின் படுதோல்விக்குக் காரணம் என்ன? சேது ராமலிங்கம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி அதிர்ச்சியூட்டும் வகையில் தோல்வியடைந்துள்ளது. நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி மூன்று இடங்களிலும் சிபிஐ இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. மார்க்சிஸ்ட் கட்சி 40 இடங்களில் டொபாசிட் இழந்துள்ளது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, கட்சி சுய பரிசீலனை செய்யும் எனத் தெரிவித்துள்ளார். அவர்கள் உண்மையாகப் பரிசீலிப்பார்களோ, இல்லையோ என்பது நமக்கு தெரியாது. ஆனால், அந்தக் கட்சியின் படுதோல்விக்கான காரணங்களை நாம் ஆராய்வோம். சுருங்கிவரும் கட்சி இந்தியாவிலேயே ஒப்பீட்டளவில் பெரிய இடதுசாரிக் கட்சியாகவும் ஓரளவுக்கு வசதிகளை, குறிப்பாகக் கட்டமைப்பு வசதிகளையும் அறிவாளிகளையும் கொண்டதாக மார்க்சிஸ்ட் கட்சி உள்ளது. சிபிஐயிலிருந்த அரசியல் தத்துவார்த்த நிலைப்பாடுகளில் வேறுபட்டு 1964இல் பிரிந்த சிபிஎம் இதுவரை இப்படிப்பட்ட படுதோல்வியைச் சந்தித்ததில்லை. 1977லிருந்து 2011 வரை ஏறத்தாழ 34 ஆண்டுகள் மேற்கு வங்கத்தை ஆட்...