முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
நதிகள் இணைப்பு: மறக்கக் கூடாத பாடம்! சேது ராமலிங்கம் நதிகள் வீணாகக் கடலில் போய் கலக்கின்றன. அதை திருப்பி ஒன்றாக இணைத்து வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதுதான் நதிகள் இணைப்புத் திட்டம். அந்தத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாடு வளம் கொழிக்கும் வல்லரசாகிவிடும் என்று நமது நாட்டில் நீண்ட நெடுங்காலமாக நம்பப்பட்டுவரும் மூடநம்பிக்கை. இது ஆட்சியாளர்களினாலும் சில அமைப்புகளினாலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதை ஏன் ஓர் அறிவியல்பூர்வமற்ற கற்பனைத் திட்டம் என்று கூறுகிறோம்? இயற்கையின் இயக்க விதி நதிகள் கடலில் சேருவது இயற்கையின் இயக்க விதி. ஏனெனில், அதுவே அறிவியல்பூர்வமான நடவடிக்கையும் ஆகும். ஆதிகாலத்தில் கடல் உருவானபோது அது நன்னீராகவே இருந்தது. நதிகள் மணலையும் சிறு கற்களையும் கனிமவளங்களையும் உருட்டிக்கொண்டு சேர்த்தன. அதன் பிறகு கடல் நீர் இன்றுள்ளதுபோல உப்புத்தன்மை கொண்டதாக மாறியது. கடல் நீரில் 63 விழுக்காடு நன்னீர், 33 விழுக்காடு உப்பு, 2 விழுக்காடு கனிமவளங்கள் உள்ளன என்று தோராயமாக கடலியல் அறிவியலாளர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது. கடலில் மீன்வளத்துக்கும் தாவரவா...
நதிகளின் தற்கொலை! சேது ராமலிங்கம் தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் தண்ணீர் பஞ்சமும் வறட்சியும் ஏற்பட்டுள்ளது. சென்னைக்குக் குடிநீர் ரயிலில் ஜோலார்பேட்டையிலிருந்து கொண்டுவரும் அளவுக்கு அவலநிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் பஞ்சமும் பற்றாக்குறையும் ஏற்பட்டதற்கு யார் காரணம், ஏன் தண்ணீர் மேலாண்மையை மேற்கொள்ளவில்லை என்ற அடிப்படைக் கேள்விகளுக்குப் போகாமல் வேறொரு பிரச்சினையானது தீர்வாக வைக்கப்படுகிறது கடலில் கலக்கும் நதிகளை இணைப்பது, கங்கை காவிரி இணைப்புத் திட்டம், கோதாவரி இணைப்புத் திட்டம் எனத் திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. நதிகளின் மரணம் நதிகள் இணைப்பு ஒன்றுதான் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு என வலியுறுத்தப்படுகிறது. ஆனால், நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லாதது என்று கூறி பல நேரங்களில் மத்திய நீர் ஆணையத்தினால் (Central Water Commission) நிராகரிக்கப்பட்டுள்ளது. தண்ணீர்த் துறை சார்ந்த நிபுணர்களால் இது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நதிகளின் தற்கொலைக்குச் சமமானது என்றும் கருத்து கூறியுள்ளனர். மேலிருந்து கீழ் நோக்கிப் பாயும் நதிகளின் நீரோட்டத்தை மேல் நோக்கித் திருப்ப...