கொரானாவும் மீனவர்களும்; தொலைந்து போன முகமற்றவர்களின் கதை! ஊரடங்கு அறிவிக்கப்பட்டு சில நாட்கள் கழித்து யாரையான் சோமேஷ் (வயது 18) என்ற ஆந்திராவைச் சேர்ந்த மீனவ இளைஞர், எந்திர படகு மூலம் மீன்பிடிக்கச் சென்றபோது குஜராத்தின் வெரவாலின் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலில் மாட்டிக்கொண்டான். அவர் சென்ற கலத்திலிருந்ததோ (படகு) 500 லிட்டர் தண்ணீர்தான். அது அவருக்கு அவருடைய முதலாளியினால் நாளொன்று 8 லிட்டர் தண்ணீர்தான் அளிக்கப்பட்டிருந்தது. அவருடன் மற்ற மீனவர்கள் 50பேர் கலத்தில் இருந்தனர். ஒரு நாள் முழுவதும் அவருடைய அனைத்து தேவைகளுக்கும் அந்த 8 லிட்டர் தண்ணீரைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். உணவும், முதலாளி அளிக்கும் குறிப்பிட்ட அளவு அரிசிதான் சேமிப்பாக இருந்தது. சோமேஷ் போன்று ஏறத்தாழ பல்வேறு கடற்கரை மாநிலங்களைச் சேர்ந்த 15,000 மீனவத் தொழிலாளர்கள் ஊரடங்குக்கு முன்னதாக மீன்பிடிக்கச் சென்றவர்கள் நடுக்கடலில் மாட்டிக்கொண்டு தத்தளிப்பதாக மீனவ சங்கங்கள் தெரிவித்துள்ளன. இவர்களுக்குக் குடிக்க மட்டுமே தண்ணீர் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது தொலைக்காட்சிகள், பத...
ஆனந்த விகடனுக்கு இதுவும் கிளுகிளுப்புதான்! by Prakash விகடன் குழுமம் ஒரே நாளில் தனது பத்திரிகையாளர்கள் மற்றும் ஊழியர்கள் என மொத்தம் 176 பேரை வேலை நீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. அந்த 176 பேரும் வரும் அடுத்த மாதம் (ஜூன்) வேலையிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்று வாய்வழியாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தாங்களாகவே வேலையை விட்டு விலகுவதாக எழுதித்தர வேண்டும் என்று மிரட்டல் பாணியில் கூறியுள்ளது. இந்த செய்தி வைரலாக, சமூக ஊடகங்களில் பலத்த எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இதன் எதிர்வினையாக விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில் ஒரு சிலர் மட்டுமே தங்களது கோபத்தைத் தெரிவித்துள்ளனர். ஆனால், சிலரோ நம்ம விகடனிலா இது நடந்ததுள்ளது என்று வேதனைப்பட்டுள்ளனர். விகடனின் குரூர முகம் தெரியாததால் ஏற்படும் அனுதாபம் மட்டுமல்ல இது பத்திரிகைகள், பத்திரிகையாளர்களின் குறித்து பிரமைகளின் வெளிப்பாடே இது. விகடனில் பணி புரிந்த முன்னாள் ஆசிரியர் கம்பெனியில் நஷ்டம் என்ன செய்வது என்று புலம்பியிருந்தார். ஒரு பெரிய நிறுவனம் வெறும் 40 நாட்கள் கொரோனா ஊரடங்கினால் (அதன் பத்திரிகைகள் ...